
Bagappirivinai songs and lyrics
Top Ten Lyrics
Thaazhayaam Poomudithu Lyrics
Writer :
Singer :
தாழையாம் பூ முடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னமா?
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணைய்யா
இந்த ஏழைகளுக்கு என்ன்வேணும் சொல்லைய்யா
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா
அது மானாதி மானம் தன்னை காக்குமா
மானாதி மானங்களை காக்குமா
………தாழையாம் பூமுடிச்சி……….
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை புன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே – எங்கள்
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே
…………. பாளை போல் சிரிப்பிருக்கு………..
அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை.. ஓ…
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா – அவர்
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லய்யா
…………..பாளை போல் சிரிப்பிருக்கு…………….
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.