Maalayil Varum Lyrics

Writer :

Singer :




மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

அழகான தோரணங்கள் வான் மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
அழகான தோரணங்கள் வான் மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
இந்திரன் சபை திருமண அறை
மாலை மணம் மையலை தரும்
எங்கெங்கும் மலர்மாரி பொழிகின்றது

மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
ஆ ஆ...காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மஞ்சளின் மணம் என் மனதில் வரும்
குங்கும நிறம் என் மார்பினில் விழும்
பேரின்ப சொர்க்கத்தில் நாம் வாழ்கிறோம்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

பாடல்: மாலையில் வரும்
திரைப்படம்: அவள் ஏற்றிய தீபங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.